முகப்பு
தற்போதைய செய்திகள்

மணல் கடத்திய டிராக்டரை பிடிக்கச் சென்ற கிராம நிர்வாக அலுவலரை கொல்ல முயற்சி

காட்டுமன்னார்கோயில் அருகே ஓமாம்புலியூரில் மணல் குவாரி உள்ளது. தற்போது அந்த மணல் குவாரி மூடப்பட்டுவிட்டது. இருப்பினும் இரவு, பகலாக அங்கிருந்து மணலை திருடி டிராக்டர் மற்றும் லாரி மூலம் கடத்துவதாக

Updated On : 3 ஜனவரி, 2024 at 11:26 AM
பகிர்:

காட்டுமன்னார்கோயில் அருகே மணல் கடத்திய டிராக்டரை பிடிக்கச் சென்ற கிராம நிர்வாக அலுவலரை டிராக்டரை ஏற்றி கொலை செய்ய முயன்றுள்ளனர்.

காட்டுமன்னார்கோயில் அருகே ஓமாம்புலியூரில் மணல் குவாரி உள்ளது. தற்போது அந்த மணல் குவாரி மூடப்பட்டுவிட்டது. இருப்பினும் இரவு, பகலாக அங்கிருந்து மணலை திருடி டிராக்டர் மற்றும் லாரி மூலம் கடத்துவதாக வருவாய்த்துறையினருக்கு தகவல் வந்தது. அதன்பேரில் ஓமாம்புலியூர் கிராம நிர்வாக அலுவலர் அக்னிராஜ் (25) இன்று காலை மணல் கடத்திய டிராக்டரை பிடிக்க பின்தொடர்ந்து சென்றுள்ளார்.

அப்போது டிராக்டர் டிரைவர் பிரேக் போட்டு நிறுத்தி திடீரென பின்புறமாக இயக்கி கிராம நிர்வாக அலுவலர் மீது மோதி முயன்றதாக தெரிகிறது. இதிலிருந்து தப்பிய கிராம நிர்வாக அலுவலர் அக்னிராஜ் வட்டாட்சியர் தில்லைகோவிந்தனிடம் புகார் செய்தார். இதனையடுத்து வட்டாட்சியர் தில்லைகோவிந்தன் காட்டுமன்னார்கோயில் காவல் நிலையத்தில் புகார் அளித்ததை அடுத்து போலீஸார் வழக்குப் பதிந்து டிராக்டர் டிரைவரை தேடி வருகின்றனர்.

முழு கட்டுரையைப் படிக்க →