காரைக்கால் ரயில் நிலையத்தில் தீ விபத்து
ரயில் நிலையத்தில் இன்று இரவு 8.45க்கு சென்னைக்குப் புறப்பட்டுச் செல்லும் ரயில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அதன் அருகே சுமார் 10 மீட்டர் தொலைவில் கட்டுமானப் பணிகளுக்காக ஒப்பந்ததாரர்கள் போட்டிருந்த
காரைக்கால் ரயில் நிலையத்தில் இன்று மாலை 5.30 மணி அளவில் தீ விபத்து ஏற்பட்டது.
ரயில் நிலையத்தில் இன்று இரவு 8.45க்கு சென்னைக்குப் புறப்பட்டுச் செல்லும் ரயில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அதன் அருகே சுமார் 10 மீட்டர் தொலைவில் கட்டுமானப் பணிகளுக்காக ஒப்பந்ததாரர்கள் போட்டிருந்த கொட்டகையில் தீ விபத்து ஏற்பட்டது. இதை அடுத்து தகவல் அறிந்த தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். ரயில் பெட்டி 10 மீட்டர் இடைவெளியில் அருகே இருந்ததால், பெட்டிகளிலும் தண்ணீர் ஊற்றி சுத்தப்படுத்தும் பணியில் வீரர்கள் ஈடுபட்டனர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.