சாராய வியாபாரி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
கெங்கவல்லி அருகேயுள்ள 74 கிருஷ்ணாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் கணேசன் மகன் ஆபிரஹாம் (24). இவர் கெங்கவல்லி சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடர்ந்து கள்ளச் சாராயம் விற்பனை செய்து வந்ததாகக்
சேலம் மாவட்டம் கெங்கவல்லியைச் சேர்ந்த சாராய வியாபாரி மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.
கெங்கவல்லி அருகேயுள்ள 74 கிருஷ்ணாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் கணேசன் மகன் ஆபிரஹாம் (24). இவர் கெங்கவல்லி சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடர்ந்து கள்ளச் சாராயம் விற்பனை செய்து வந்ததாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக அவர் மீது 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இந்த நிலையில் கடந்த மார்ச் 19-ம் தேதி சாராய கடத்தலில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்ட ஆபிரஹாம், இப்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரிடம் இருந்து 3 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்த நிலையில் தொடர்ந்து சாராய கடத்தல், வியாபாரத்தில் ஈடுபட்டு வரும் ஆபிரஹாமை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க எஸ்.பி. அஸ்வின் கோட்னீஸ் பரிந்துரைத்தார்.
Advertisement
இதையடுத்து சாராய வியாபாரி ஆபிரஹாமை குண்டர் சட்டத்தின் கீழ் அடைக்க மாவட்ட ஆட்சியர் க.மகரபூஷணம் உத்தரவிட்டார். இதையடுத்து சிறையில் உள்ள ஆபிரஹாமுக்கு உத்தரவு நகல் வழங்கப்பட்டுள்ளது.