வாரணாசி எக்ஸ்பிரஸ் ரயிலில் அடிப்பட்டு காதுகேளாத சிறுவன் சாவு
சிதம்பரம் அருகே வாரனாசி-ராமேஸ்வரஸ் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் அடிபட்டு காதுகேளாத சிறுவன் இறந்தார்.
சிதம்பரம் அருகே வாரனாசி-ராமேஸ்வரஸ் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் அடிபட்டு காதுகேளாத சிறுவன் இறந்தார்.
சிதம்பரம் அருகே கதிர்வேலு நகரைச் சேர்ந்த துரைசிங் மகன் ராஜ்சிங் (14). காதுகேளாத, வாய் பேச முடியாத இச்சிறுவன் சிதம்பரம் காதுகேளாதோர் பள்ளியில் 5-ம் வகுப்பு படிக்கிறார். சிறுவன் ராஜ்சிங் செவ்வாய்க்கிழமை சிதம்பரம் அருகே மீதிகுடி ரயில்பாதையில் நடந்து சென்ற போது மாலை 3.45 மணி்க்கு வந்த வாரனாசி-ராமேஸ்வரம் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே இறந்தார். இதுகுறித்து சிதம்பரம் ரயில்வே போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பாண்டியன், தனிப்பிரிவு காவலர் பாஸ்கர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். சிதம்பரம் ரயில்வே போலீஸார் வழக்குப் பதிந்துள்ளனர்.