நாகை அக்கரைப்பேட்டையில் மீனவர்கள் வேலைநிறுத்தம்
நாகை காரைக்கால் மீனவர்கள் 65 பேரும் ராம்நாதபுரம் மீனவர்கள் 34 பேரும் இலங்கைக் கடற்படையால் சிறைப்பிடிக்கப்பட்டுள்ள நி
நாகை மாவட்டம் அக்கரைப்பேட்டையில் மீனவர்கள் வேலை நிறுத்தம் மேற்கொண்டுள்ளனர்.
நாகை காரைக்கால் மீனவர்கள் 65 பேரும் ராம்நாதபுரம் மீனவர்கள் 34 பேரும் இலங்கைக் கடற்படையால் சிறைப்பிடிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களை விடுவிக்க வலியுறுத்தியும், இலங்கைக் கடற்படையால் தொடர்ந்து மீனவர்கள் கைது செய்யப்படுவதைக் கண்டித்தும் இன்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இன்று மாலை நாகை வட்ட மீனவ பஞ்சாயத்தார் கூட்டம் நடைபெறவுள்ளது.
அதில், அடுத்தடுத்த போராட்டத்துக்கான அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்படுகிறது.