பண்ருட்டி நகைக்கடைகளில் சுங்க இலாகாவினர் திடீர் சோதனை
பண்ருட்டியை சேர்ந்த நகைக்கடை மற்றும் நகை அடகுக் கடை உரிமையாளர்கள் 20 பேர் கொண்ட குழுவினர் சிங்கப்பூர், மலேசியா ஆகிய பகுதிகளுக்கு சுற்றுலா சென்றனர். இவர்கள் கடந்த சனி கிழமை
பண்ருட்டியை சேர்ந்த நகைக்கடை மற்றும் நகை அடகுக் கடை உரிமையாளர்கள் 20 பேர் கொண்ட குழுவினர் சிங்கப்பூர், மலேசியா ஆகிய பகுதிகளுக்கு சுற்றுலா சென்றனர். இவர்கள் கடந்த சனி கிழமை சென்னை திரும்பியபோது அவர்களிடமிருந்து சுமார் 70 லட்சம் மதிப்புள்ள தங்கம் பிடிபட்டதாக தெரிகிறது. இந்த சம்பவத்தில் 14பேர் மீது சுங்க இலாக்காவினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதன் தொடர்சியாக இன்று பண்ருட்டியில் சம்பந்தபட்டவர்களின் நகைக் கடைகளில் சுங்க இலாகாவினர் சோதனை நடத்தி வருகின்றனர்.