அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு: பாபநாசம், சேர்வலாறு அணைகளின் நீர்மட்டம் உயர்வு
நிகழ் பருவத்தில் தென்மேற்கு பருவ மழை பெய்து வருவதால் திருநெல்வேலி மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. கடனாநதி, ராமநதி அணைகள் 2 முறை நிரம்பியது. கடந்த 2
மேற்குத் தொடர்ச்சி மலையில் நீர்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் மழையால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.இதை தொடர்ந்து சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 5 அடி உயர்ந்துள்ளது.
நிகழ் பருவத்தில் தென்மேற்கு பருவ மழை பெய்து வருவதால் திருநெல்வேலி மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. கடனாநதி, ராமநதி அணைகள் 2 முறை நிரம்பியது. கடந்த 2 தினங்களாக மேற்குத் தொடர்ச்சி மலையில் நீர்பிடிப்பு பகுதியில் மிதமான மழை பெய்து வருகிறது. இருந்த போதிலும் அணைகளுக்கு நீர்வரத்து கணிசமாக அதிகரித்துள்ளது.
இன்றைய காலை நிலவரப்படி பாபநாசம் அணையில் 17 மி.மீ மழையும்,பாபநாசம் கீழ்அணையில் 25 மி.மீ மழையும், சேர்வலாறு அணையில் 8 மி.மீமழையும், மணிமுத்தாறு அணையில் 17.4 மி.மீ மழையும், அம்பாசமுத்திரத்தில் 2மி.மீ மழையும் பதிவாகியுள்ளது.பாபநாசம் அணைக்கு விநாடிக்கு 3015.16 கனஅடி நீர்வரத்து இருந்தது. அணையின் நீர்மட்டம் 1.10 அடி உயர்ந்து 127.85 அடியாக உயர்ந்துள்ளது. அணையில் இருந்து பாசனம் மற்றும் குடிநீர் தேவைக்கு 1504.75 கனஅடி திறந்து விடப்படுகிறது. சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 5 அடி உயர்ந்து 133.20 அடியாக இருந்தது.
மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 65.75 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 106 கனஅடி நீர்வரத்து இருந்தது. அணையில் இருந்து பெருங்கால் மதகு பாசனத்திற்கு 55 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. கடனாநதி அணையின் நீர்மட்டம் 1.30 அடி உயர்ந்து 80.80 அடியாக இருந்தது. அணைக்கு வந்து கொண்டிருந்த உபரி நீர் 125 கனஅடி திறந்து விடப்பட்டுள்ளது. ராமநதி அணையின் நீர்மட்டம் 1 அடி உயர்ந்து 76.75 அடியாக இருந்தது.அணைக்கு விநாடிக்கு 195 கனஅடி நீர்வரத்து இருந்தது. அணையில் இருந்து 60 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.