சிதம்பரம் அருகே கிராமத்திற்குள் புகுந்த 6 அடி நீள முதலை!
சிதம்பரம் அருகே உள்ள இளநாங்கூர் கிராமத்தில் தோப்புத்தெருவிற்குள் இன்று காலை முதலை ஒன்று புகுந்துவிட்டதாக பொதுமக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த சிதம்பரம்
சிதம்பரம் அருகே இன்று காலை கிராமத்திற்குள் புகுந்த முதலையை வனத்துறையினர் பிடித்தனர்.
சிதம்பரம் அருகே உள்ள இளநாங்கூர் கிராமத்தில் தோப்புத்தெருவிற்குள் இன்று காலை முதலை ஒன்று புகுந்துவிட்டதாக பொதுமக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த சிதம்பரம் வனவர் பி.மணி, வனக்காப்பாளர் எம்.ராஜேஷ்குமார் மற்றும் களப்பணியாளர்கள் அக்கிராமத்திற்கு விரைந்து சென்று பொதுமக்கள் உதவியுடன் 6 அடி நீளமுள்ள 150 கிலோ எடை கொண்ட முதலையை பிடித்தனர். பின்னர் அந்த முதலையை அருகாமையில் உள்ள வக்காரமாரி நீர்தேக்கத்தில் கொண்டு விட்டனர்.