தற்போதைய செய்திகள்

பூட்டிய வீட்டின் மாடி வழியாக புகுந்து 19 சவரன் நகை திருட்டு

விருதுநகர் அருகே வீட்டின் உரிமையாளர்கள் வெளியூர் சென்றிருந்த நேரத்தில் மாடி வழியாக வீட்டிற்குள் புகுந்து பீரோவில் இருந்த 19 சவரன் நகையை திருடிச் சென்ற மர்ம நபர்கள் குறித்து

எஸ். பாண்டியன்

விருதுநகர் அருகே வீட்டின் உரிமையாளர்கள் வெளியூர் சென்றிருந்த நேரத்தில் மாடி வழியாக வீட்டிற்குள் புகுந்து பீரோவில் இருந்த 19 சவரன் நகையை திருடிச் சென்ற மர்ம நபர்கள் குறித்து போலீஸார் தீவிரமாக விசாரணை செய்து வருகிறார்கள்.

விருதுநகர் அருகே செங்குன்றாபுரம் கிராமத்தைச் சேர்ந்த செல்வமணி என்பவரின் மனைவி செல்வக்கனி(50). இவர், தையல் வேலை செய்து வருகிறார். இந்நிலையில் கடந்த சில நாள்களுக்கு வெளியூரில் இருக்கும் தனது மகன் வீட்டிற்கு சென்று வருவதாக கூறி வீட்டை பூட்டி விட்டு சென்றாராம். இதையடுத்து தனது சொந்த ஊருக்கு திங்கள்கிழமை திரும்பினார். பின்னர் வீட்டை திறந்து உள்ளே நுழைந்துள்ளார், அப்போது பொருள்கள் சிதறியும், பீரோவும் திறந்து இருப்பதை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்தார். பின் பீரோவை பார்க்கையில் அதிலிருந்த 19 சரவன் நகைகளை யாரோ அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.

இது தொடர்பாக ஆமத்தூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் போலீஸார் மற்றும் கைரேகை நிபுணர்களும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கதவு உள்ளிட்ட இடங்களில் ரேகை பதிவு செய்தனர். எனவே இது குறித்து செல்வக்கனி கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் வழக்கு பதிவு செய்து திருடிச் சென்ற மர்ம நபர்கள் குறித்து தீவிரமாக விசாரணை செய்து வருகிறார்கள். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அரபு நாடுகளின் பகுதிகள் மீது இஸ்ரேலுக்கு உரிமை?

நமோ பாரத் ரயில் பாதை திட்டம் தில்லியின் வளா்ச்சியை அதிகரிக்கும்: முதல்வா் ரேகா குப்தா

ஒடிஸா: 7-ஆம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த 5 ஆசிரியா்கள் கைது

பைக்கில் சென்ற பெண்ணின் நகை பறிப்பு

தில்லியில் பயங்கரவாத சதி: வங்கதேசத்தினா் உள்பட 8 போ் கைது

SCROLL FOR NEXT