முகப்பு
தற்போதைய செய்திகள்

இன்ஸ்பெக்டருக்கு நீதிமன்றம் பிடிவாரண்டு

கடலூர் மாவட்டம் சோழத்தரம் காவல் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றியவர் ஆனந்தபாபு. இவர் தற்போது சென்னையில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார். 2005-ம் ஆண்டு சோழத்தரம் காவல்

Updated On : 3 ஜனவரி, 2024 at 1:07 PM
பகிர்:

இன்ஸ்பெக்டர் ஒருவருக்கு காட்டுமன்னார்கோயில் நீதிமன்றம் இன்று பிடிவாரண்டு உத்தரவு பிறப்பித்துள்ளது.

கடலூர் மாவட்டம் சோழத்தரம் காவல் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றியவர் ஆனந்தபாபு. இவர் தற்போது சென்னையில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார். 2005-ம் ஆண்டு சோழத்தரம் காவல் நிலைய எல்லையில் உள்ள அறந்தாங்கியில் கோயில் திருவிழாவில் கோஷ்டி மோதல் குறித்து வழக்குப் பதிவு செய்தார். இவ்வழக்கு விசாரணை காட்டுமன்னார்கோயில் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இவ்வழக்கில் 25-7-2009ல் ஆனந்தபாபு ஆஜரானார். அதன் பின்னர் வழக்கு விசாரணையில் ஆஜராகவில்லை. இந்நிலையில் இன்று காட்டுமன்னார்கோயில் குற்றவியல் மற்றும் உரிமையியல் நீதிமன்ற நீதிபதி செந்தில்குமார் இன்ஸ்பெக்டர் ஆனந்தபாபுவை 28-7-2013க்குள் ஆஜர்படுத்துமாறு பிடிவாரண்டு பிறப்பித்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.

முழு கட்டுரையைப் படிக்க →