முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்ய நடராஜர் கோயிலில் திரண்ட மக்கள்!
ஆடி அமாவாசையை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலில் உள்ள தீர்த்தகுளமான சிவகங்கையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம், சிரார்த்தம் செய்ய மக்கள் திரண்டனர். சிவகங்கை தீர்த்த
ஆடி அமாவாசையை முன்னிட்டு சிதம்பரம் ஸ்ரீநடாரஜர் கோயிலில் உள்ள சிவகங்கை தீர்த்த குளத்தில் பொதுமக்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்ய திரண்டனர்.
ஆடி அமாவாசையை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலில் உள்ள தீர்த்தகுளமான சிவகங்கையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம், சிரார்த்தம் செய்ய மக்கள் திரண்டனர். சிவகங்கை தீர்த்த குளத்தில் குளித்து அங்குள்ள சாஸ்திரிகளிடம் தர்ப்பணம் செய்து கொண்டனர். பின்னர் சிதம்பரம் கீழசன்னதி திருச்சிற்றம்பலம் அன்னதான அறக்கட்டளை சார்பில் 100 பேருக்கு சிறப்பு அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை அன்னதான டிரஸ்ட் தலைவர் சி.நவதாண்டவ தீட்சிதர் செய்திருந்தார்.