தரங்கம்பாடி: படகுகளில் கறுப்புக் கொடி ஏற்றி மீனவர்கள் ஆர்ப்பாட்டம்
நாகை மாவட்டம் தரங்கம்பாடி டேனிஷ் கோட்டை முன்புறத்தில் 10 மீனவ கிராமங்களைச் சேர்ந்த மீனவர்கள் இணைந்து கடலில் ஒரே பகுதியில் படகுகளில் கருப்புக்கொடி ஏற்றி இலங்கை அரசைக் கண்டித்து சனிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நாகை மாவட்டம் தரங்கம்பாடி டேனிஷ் கோட்டை முன்புறத்தில் 10 மீனவ கிராமங்களைச் சேர்ந்த மீனவர்கள் இணைந்து கடலில் ஒரே பகுதியில் படகுகளில் கருப்புக்கொடி ஏற்றி இலங்கை அரசைக் கண்டித்து சனிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அண்மையில் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு சிறை வைக்கப்பட்டுள்ள நாகை,காரைக்கால் மாவட்டங்களைச் சேர்ந்த 65 மீனவர்களையும்,9 விசைப்படகுகளையும் உடனடியாக விடுவிக்க வேண்டும். அடிக்கடி மீனவர்களை தாக்குவது சிறை வைப்பது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடும் இலங்கை அரசைக் கண்டிப்பதோடு மத்திய அரசு இதில் தலையிட்டு இப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணவேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
தரங்கம்பாடி, சந்திரப்பாடி, குட்டியாண்டியூர், பெருமாள்பேட்டை, சின்னங்குடி, புதுப்பேட்டை, தாழம்பேட்டை, சின்னமேடு, வெள்ளக்கோயில், சின்னூர்பேட்டை ஆகிய 10 மீனவ கிராமங்களைச் சேர்ந்த சுமார் 2 ஆயிரம் மீனவர்கள் விசைப்படகுகள் உள்ளிட்ட சுமார் ஆயிரம் பைபர் படகுகளில் கருப்புக்கொடி ஏற்றி தரங்கம்பாடி டேனிஷ் கோட்டைக்கு எதிரே கடலில் நிறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் பெண்கள் உள்ளிட்ட மீனவர்கள் கடல் கரையில் அமர்ந்தும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
Advertisement