முகப்பு
தற்போதைய செய்திகள்

மயிலாடுதுறையில் நிலத்தடி நீர் உறிஞ்சப்படுதற்கு எதிர்ப்பு தெரிவித்து  நூதனப் போராட்டம்

மயிலாடுதுறையில் நிலத்தடி நீர்,  ஆயில்  என்ஜின்  மூலம்  உறிஞ்சப்பட்டு விற்பனை  செய்யப்படுவதை கண்டித்து, இன்று ஒருவர் தனது வீட்டில் கருப்புக்கொடி ஏற்றி, நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டார்.

Updated On : 3 ஜனவரி, 2024 at 1:14 PM
பகிர்:

மயிலாடுதுறையில் நிலத்தடி நீர்,  ஆயில்  என்ஜின்  மூலம்  உறிஞ்சப்பட்டு விற்பனை  செய்யப்படுவதை கண்டித்து, இன்று ஒருவர் தனது வீட்டில் கருப்புக்கொடி ஏற்றி, நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டார்.

மயிலாடுதுறை நகரம், வாத்துக்காரத் தெருவில் தனியாருக்கு சொந்தாமன    இடத்தில் ஆழ்குழாய் பதிக்கப்பட்டு,ஆயில்  என்ஜின் மூலம்  நிலத்தடி  நீர்  உறிஞ்சப்பட்டு விற்பனை செய்பட்டு  வருகின்றது.

இதனால் அந்த  பகுதியில்  நிலத்தடி  நீர்மட்டம்  குறைந்து வருவதுடன், கைபம்பு மூலம் தண்ணீர் எடுக்கமுடியவில்லையாம். இது குறித்து  மயிலாடுதுறை  நகரம் வாத்துக்காரத்தெருவில் வசிக்கும் கு.  ஆரோக்கியசாமி (62) என்பவர் தமிழக முதல்வரின் தனிப்பிரிவு, நாகை மாவட்ட  ஆட்சியர் மற்றும்  மயிலாடுதுறை நகராட்சி நிர்வாகம் ஆகியவற்றிற்கு புகார் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.

இதனைத் கண்டித்து, ஆரோக்கியசாமி சுத்திரதின நாளான  வியாழக்கிழமை தனது வீட்டில்  கருப்புக்கொடி கட்டி,  தண்ணீர் வராத கைப்பம்பினை நட்டு, நிலத்தடி  நீருக்கு சமாது கட்டி, பூப்போட்டு,ஒப்பாரி பாடல்களை  ஒளிப்பரப்பி  நூதன  போராட்டத்தில் ஈடுபட்டார்.

இது குறித்து   ஆரோக்கியசாமி கூறியது: பொதுமக்கள் குடி தண்ணீருக்கு அவதிப்படும் நிலையில்  கடந்த 2 ஆண்டுகளுக்கு வாத்துக்காரத் தெருவில் ஆயில் என்ஜின் மூலம் நிலத்தடி  நீர் உறிஞ்சப்பட்டு, நகரில்  வணிக நிறுவனங்களுக்கு  விற்பனை  செய்யப்பட்டு வருகின்றது.

 இது குறி்த்து நகராட்சி நிர்வாகத்திற்கு புகார் தெரிவி்த்தும் நடவடிக்கை  டுக்கவில்லை. அதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியரு்க்கு 6 முறை புகார் மனுக்கள்  அளிக்கப்பட்டும் நடவடிக்கையில்லை என்றார் அவர்.

முழு கட்டுரையைப் படிக்க →