முகப்பு
தற்போதைய செய்திகள்

மனைவிக்கு கொலை மிரட்டல் விடுத்த கணவர் கைது

சிதம்பரம் அருகே வரதட்சிணை கேட்டு மனைவியை அடித்து திட்டி கொலை மிரட்டல் விடுத்ததாக கணவரை மகளிர் போலீஸார் கைது செய்தனர். மேலும் இது தொடர்பாக மாமனார், மாமியார், மைத்துனர் உள்ளிட்ட

Updated On : 3 ஜனவரி, 2024 at 1:19 PM
பகிர்:

சிதம்பரம் அருகே வரதட்சிணை கேட்டு மனைவியை அடித்து திட்டி கொலை மிரட்டல் விடுத்ததாக கணவரை மகளிர் போலீஸார் கைது செய்தனர். மேலும் இது தொடர்பாக மாமனார், மாமியார், மைத்துனர் உள்ளிட்ட மூவரை தேடி வருகின்றனர்.

சிதம்பரம் அருகே உள்ள மீதிகுடி கிராமத்தைச் சேர்ந்த மணிகண்டன். இவரது மனைவி உஷாராணி (27). இருவருக்கும் திருமணமாகி 6 ஆண்டுகள் ஆகிறது. 2 குழந்தைகள் உள்ளனர். இருவருக்கும் இடையே வரதட்சிணை கேட்டு கடந்த சில மாதங்களாக தகராறு இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் செவ்வாய்க்கிழமை இரவு கணவர் மணிகண்டன், மாமனார் கணேசன், மாமியார் தங்கம், மைத்துநர் செல்வராஜ் ஆகிய நால்வரும் சேர்ந்து உஷாராணியை அடித்து திட்டி கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து உஷாராணி சிதம்பரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் மீனா வழக்குப் பதிந்து கணவர் மணிகண்டனை கைது செய்தார். மேலும் இது தொடர்பாக மாமனார், மாமியார் மற்றும் மைத்துனரை போலீஸார் தேடி வருகின்றனர்.

முழு கட்டுரையைப் படிக்க →