முகப்பு
தற்போதைய செய்திகள்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 2 போலீஸ்காவலர்கள் பணி இடை நீக்கம்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இரண்டு காவலர்கள் பணியிடை நீக்கம்  செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்து மாவட்ட காவல் ஆணையர் அலுவலகம் தெரிவித்துள்ளதாவது:-

Updated On : 3 ஜனவரி, 2024 at 7:19 PM
பகிர்:

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இரண்டு காவலர்கள் பணியிடை நீக்கம்  செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்து மாவட்ட காவல் ஆணையர் அலுவலகம் தெரிவித்துள்ளதாவது:-

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சட்டவிரோதமாக சூதாட்ட கிளப் நடப்பதாக கிடைத்த தகவலின் பேரில் காவல் ஆய்வாளர் தலைமையில் சோதனை நடத்தப்பட்டது. அப்போது ராயக்கோட்டை காவல் நிலைய காவலர் ராவமூர்த்தி என்பவரும் அந்த தனியாருக்கு சொந்தமான சூதாட்ட கிளப்பில் இருந்துள்ளார். அதேபோல் கிருஷ்ணகிரி மாவட்ட ஆயுதப்படை காவலர் மனோகரன் பணியின் போது குடிபோதையில் இருந்துள்ளார்.

இதனால் இருவரையிம் பணி இடை நீக்கம் செய்து மாவட்ட எஸ்பி.எஸ்.ஆர்.செந்தில் குமார் உத்தரவிட்டுள்ளார்.

முழு கட்டுரையைப் படிக்க →