தேவயாணி கைது விவகாரத்தில் அமெரிக்கா பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்: பொன்.ராதாகிருஷ்ணன்
திருவாரூர் மாவட்டம் பொறையாறில் இன்று பா.ஜ.க தமிழக தலைவர் பொன்ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
திருவாரூர் மாவட்டம் பொறையாறில் இன்று பா.ஜ.க தமிழக தலைவர் பொன்ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
அமெரிக்காவில் கைது செய்யப்பட்டு, அவமதிக்கப்பட்ட இந்திய துணை தூதர் தேவயாணி விவகாரத்தில் காங்கிரஸ் கட்சி தேர்தலை கருத்தில் கொண்டே செயல்படுகிறது. முன்னர் அப்துல்கலாம் அமெரிக்காவில் அவமானப்படுத்தப்பட்டபோதே நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்.
இந்த விவகாரத்தில் அமெரிக்கா பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறினார். மேலும் ஓரினச்சேர்க்கை இந்திய கலாசாரத்துக்கு எதிரானது. இயற்கைக்கு முரணானது இது ஏற்படையதல்ல என்றும் தமிழகத்தில் பா.ஜ.க தலைமையில் வலுவான கூட்டணி அமையும் என்றும் தெரிவித்தார்.
Advertisement