முகப்பு
தற்போதைய செய்திகள்

ரயிலில் ஏறி ஸ்ரீவில்லிபுத்தூர் வந்து இறங்கிய இரு குழந்தைகள் பெற்றோரிடம் ஒப்படைப்பு

ரயலில் ஏறி, ஸ்ரீவில்லிபுத்தூர் வந்து இறங்கி நடந்து சென்று கொண்டிருந்த இரு குழந்தைகளை கிராம மக்கள் பிடித்து போலீஸில் ஒப்படைத்தனர்.

Updated On : 3 ஜனவரி, 2024 at 7:23 PM
பகிர்:

ரயலில் ஏறி, ஸ்ரீவில்லிபுத்தூர் வந்து இறங்கி நடந்து சென்று கொண்டிருந்த இரு குழந்தைகளை கிராம மக்கள் பிடித்து போலீஸில் ஒப்படைத்தனர்.

அவர்களது பெற்றோரை வரவழைத்து குழந்தைகளை சனிக்கிழமை இரவு விசாரணைக்குப் பின்னர் ஒப்படைத்தனர். திருநெல்வேலி மாவட்டம், சங்கரன்கோவில் அருகேயுள்ள புளியம்பட்டி கிராமத்தில், ரயில்வே கிராஸிங்கிற்காக செங்கோட்டை-மதுரை பாசஞ்சர் ரயில் சனிக்கிழமை மாலை நின்றுள்ளது. இந்த ரயிலில் ஆர்வத்தில் இரண்டரை வயது மற்றும் மூன்றரை வயதுடைய இரு குழந்தைகள் ஏறியுள்ளது. ஸ்ரீவில்லிபுத்தூர் ரயில் நிலையத்தில் குழந்தைகள் இறங்கி நடந்து அத்திகுளம் கிராமத்திற்கு வந்துள்ளது. அங்கு குழந்தைகளைப் பார்த்தவர்கள் விசாரித்து ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர்.

போலீஸார் இரு குழந்தைகளையும் ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்தனர். விசாரித்ததில் புளியம்பட்டி வேல்சாமி மகன் மதிவாணன் (மூன்றரை) மற்றும் கருப்பசாமி மகன் லிங்கதுரை (இரண்டரை) என்பது தெரியவந்தது. இதனையடுத்து போலீஸார் புளியம்பட்டிக்கு பெற்றோருக்கு தகவல் கொடுத்தனர். அவர் இரவு வந்து குழந்தைகளைப் பெற்றுக் கொண்டனர்.

முழு கட்டுரையைப் படிக்க →