முகப்பு
தற்போதைய செய்திகள்

ஸ்ரீவிலி.யில் மினி லோடு வேன் மோதி கொத்தனார் சாவு

ஸ்ரீவில்லிபுத்தூரில், ஞாயிற்றுக்கிழமை மதியம் மினி லோடு வேன் மோதியதில் மோட்டார் சைக்கிளில் சென்ற கொத்தனார் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தார்.

Updated On : 29 டிசம்பர், 2013 at 1:43 PM
பகிர்:

ஸ்ரீவில்லிபுத்தூரில், ஞாயிற்றுக்கிழமை மதியம் மினி லோடு வேன் மோதியதில் மோட்டார் சைக்கிளில் சென்ற கொத்தனார் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தார்.

ஸ்ரீவில்லிபுத்தூர், மேலத்தொட்டியபட்டியைச் சேர்ந்தவர் காசி மகன் ராமச்சந்திரன் (26). திருமணம் ஆகாத இருவர் கொத்தனார் வேலை செய்து வந்தார். ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து தனது கிராமத்திற்கு மோட்டார் சைக்கிளில் ஸ்ரீவில்லிபுத்தூர்-கிருஷ்ணன்கோவில் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது எதிரே ஸ்ரீவில்லிபுத்தூர் நோக்கி வெங்காய லோடு ஏற்றிக் கொண்டு சென்ற மினி லோடு வேன் டயர் வெடித்து தாறுமாறாக ஓடி மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

Advertisement

இதில் சம்பவ இடத்திலேயே ராமச்சந்திரன் உடல் நசுங்கி உயிரிழந்தார். ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து வேன் டிரைவரைக் கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.