சரியாக அளந்து போடாதா பெண் ரேஷன் ஊழியர் கொலை
ஒடிசா மாநிலம் கன்ஜம் மாவட்டத்தில் உள்ள ரம்பா என்ற கிராமத்தில் ரேஷன் கடையில் பிரணாதி நாயக் என்ற பெண் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இவர் நேற்று மாலை சாலையில்
பொருட்களை சரியாக அளந்து போடாத கூறி நடுரோட்டில் பெண் ரேஷன் ஊழியரை கொன்ற நான்கு பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்,
ஒடிசா மாநிலம் கன்ஜம் மாவட்டத்தில் உள்ள ரம்பா என்ற கிராமத்தில் ரேஷன் கடையில் பிரணாதி நாயக் என்ற பெண் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இவர் நேற்று மாலை சாலையில் சென்று கொண்டிருந்த போது இரண்டு மோட்டார் சைக்கிளில் வந்த நான்கு பேர், பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை செய்தனர்.
இந்த சம்பவம் குறித்து உடனடியாக விசாரணை நடத்திய போலீஸார் கொலையாளிகள் நான்கு பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், பெண் ஊழியர் ரேஷன் பொருட்களை ஒழுங்காக அளந்து போடாமல் முறைகேட்டில் ஈடுபட்டார் என்றும் அதனால் அவரை கொன்றதாக கூறினர். இந்த சம்பவம் ஒடிசாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.