முகப்பு
தற்போதைய செய்திகள்

கோவை குண்டுவெடிப்பு தின நினைவு அஞ்சலி: இந்து இயக்கங்களைச் சேர்ந்த 400 பேர் கைது

கோவையில் 1998ம் ஆண்டில் நிகழ்ந்த குண்டுவெடிப்புகளின் நினைவாக, இன்று வழக்கம்போல் புஷ்பாஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது.

Updated On : 3 ஜனவரி, 2024 at 10:27 AM
பகிர்:

கோவையில் 1998ம் ஆண்டில் நிகழ்ந்த குண்டுவெடிப்புகளின் நினைவாக, இன்று வழக்கம்போல் புஷ்பாஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில், பாஜக., ஆர்எஸ்எஸ்., வி.எச்.பி., பாரத்சேனா, விவேகானந்தர் பேரவை,

சிவசேனா, அனுமன்சேனா உள்ளிட்ட அமைப்புகள் இணைந்து புஷ்பாஞ்சலி நிகழ்ச்சியை நடத்தின. இதில் எச். ராஜா உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள் கலந்துகொண்டனர். இந்த நிகழ்ச்சி அனுமதியின்றி நடத்தப்படுவதாகக் கூறி, போலீஸார் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சுமார் 400 பேரைக் கைது செய்தனர்.

கோவை குண்டு வெடிப்பில் உயிரிழந்தவர்கள் தொடர்பாக, நினைவிடம் அமைக்கவேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது. மேலும், பயங்கரவாதத்துக்கு எதிரான கோஷங்களையும் அவர்கள் எழுப்பினர்.

முழு கட்டுரையைப் படிக்க →