ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பேரூராட்சி மேஸ்திரி தீண்டாமை வழக்கில் கைது
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள சுந்தரபாண்டியம் பேரூராட்சியில் துப்புரவுப் பணியாளராக வேலை செய்து வருபவர் குருசாமி மனைவி பஞ்சவர்ணம் (47). இதே பேரூராட்சியில் மேஸ்திரியாக வேலை செய்து வருபவர் சுந்தரமகாலிங்கம்
தற்போதைய செய்திகள்ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பேரூராட்சி மேஸ்திரி தீண்டாமை வழக்கில் கைது
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள சுந்தரபாண்டியம் பேரூராட்சியில் துப்புரவுப் பணியாளராக வேலை செய்து வருபவர் குருசாமி மனைவி பஞ்சவர்ணம் (47). இதே பேரூராட்சியில் மேஸ்திரியாக வேலை செய்து வருபவர் சுந்தரமகாலிங்கம்
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பெண் துப்புரவு பணியாளரை சாதியைக் கூறி ஆபாசமாகப் பேசி, மானபங்கம் செய்ய முயன்ற பேரூராட்சி மேஸ்திரி மணிவண்ணனை போலீஸார் கைது செய்தனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள சுந்தரபாண்டியம் பேரூராட்சியில் துப்புரவுப் பணியாளராக வேலை செய்து வருபவர் குருசாமி மனைவி பஞ்சவர்ணம் (47). இதே பேரூராட்சியில் மேஸ்திரியாக வேலை செய்து வருபவர் சுந்தரமகாலிங்கம் மகன் மணிவண்ணன் (48). இன்று(வெள்ளிக்கிழமை) தெருக்களை சுத்தம் செய்ய மேஸ்திரி மணிவண்ணனிடம், துப்புரவு பணியாளர் பஞ்சவர்ணம் துடைப்பம் கேட்டுள்ளார். அப்போது இருவருக்கும் வாய்த் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் மணிவண்ணன், பஞ்சவர்ணத்தை சாதியைக் கூறி ஆபாசமாகப் பேசி, சேலையைப் பிடித்து இழுத்து மானபங்கம் செய்தாராம்.
இது குறித்து கிருஷ்ணன்கோவில் காவல் நிலையத்தில் பஞ்சவர்ணம் கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து மேஸ்திரி மணிவண்ணனைக் கைது செய்தனர். ஸ்ரீவில்லிபுத்தூர் காவல் துணைக் கண்காணிப்பாளர் எஸ்.சக்திவேல் விசாரணை மேற்கொண்டுள்ளார்.