கணவன் இறந்த துக்கம் தாங்காமல், மனைவி தற்கொலை
காட்டுமன்னார்கோயில் அருகே மெய்யாத்தூரைச் சேர்ந்த அண்ணாதுரை மனைவி கலைவாணி (30). இவரது கணவர் கடந்த ஒரு மாதம் முன்பு இறந்தார். இவர்களுக்கு திருமணமாக 8 வருடமாகிறது. ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். கணவன் இறந்த பின்னர் ஒருவருடமாக மிகவும் சோகத்துடன் இருந்து வந்த கலைவாணி, வெள்ளிக்கிழமை வீட்டில்
காட்டுமன்னார்கோயில் அருகே கணவன் இறந்த துக்கம் தாங்காமல், மனைவி தற்கொலை செய்து கொண்டார்.
காட்டுமன்னார்கோயில் அருகே மெய்யாத்தூரைச் சேர்ந்த அண்ணாதுரை மனைவி கலைவாணி (30). இவரது கணவர் கடந்த ஒரு மாதம் முன்பு இறந்தார். இவர்களுக்கு திருமணமாக 8 வருடமாகிறது. ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். கணவன் இறந்த பின்னர் ஒருவருடமாக மிகவும் சோகத்துடன் இருந்து வந்த கலைவாணி, வெள்ளிக்கிழமை வீட்டில் துப்பட்டாவால் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து குமராட்சி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.