முகப்பு
தற்போதைய செய்திகள்

ஸ்ரீவில்லிபுத்தூரில் கல்லூரி சென்ற பேராசிரியரை காணவில்லை என புகார்

ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா, மகாராஜபுரத்தைச் சேர்ந்தவர் பெத்தன்ராஜ். இவரது மகன் பிச்சைமணி (25). இவர் மதுரை மாவட்டம், பேரையூரில் உள்ள திருவள்ளுவர் பாலிடெக்னிக் கல்லூரியில் துறைத் தலைவராக வேலை செய்து வந்தார். தினமும் கல்லூரி பேருந்தில் காலை 7.30 மணிக்குச் செல்லும் பேராசிரியர் பிச்சைமணி, மாலை 6.30 க்கு வீடு

தற்போதைய செய்திகள்

ஸ்ரீவில்லிபுத்தூரில் கல்லூரி சென்ற பேராசிரியரை காணவில்லை என புகார்

ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா, மகாராஜபுரத்தைச் சேர்ந்தவர் பெத்தன்ராஜ். இவரது மகன் பிச்சைமணி (25). இவர் மதுரை மாவட்டம், பேரையூரில் உள்ள திருவள்ளுவர் பாலிடெக்னிக் கல்லூரியில் துறைத் தலைவராக வேலை செய்து வந்தார். தினமும் கல்லூரி பேருந்தில் காலை 7.30 மணிக்குச் செல்லும் பேராசிரியர் பிச்சைமணி, மாலை 6.30 க்கு வீடு

Updated On : 3 ஜனவரி, 2024 at 10:30 AM
பகிர்:

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கல்லூரிக்குச் சென்ற பேராசிரியரைக் காணவில்லை என அவரது தந்தை காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார்.

ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா, மகாராஜபுரத்தைச் சேர்ந்தவர் பெத்தன்ராஜ். இவரது மகன் பிச்சைமணி (25). இவர் மதுரை மாவட்டம், பேரையூரில் உள்ள திருவள்ளுவர் பாலிடெக்னிக் கல்லூரியில் துறைத் தலைவராக வேலை செய்து வந்தார். தினமும் கல்லூரி பேருந்தில் காலை 7.30 மணிக்குச் செல்லும் பேராசிரியர் பிச்சைமணி, மாலை 6.30 க்கு வீடு திரும்புவாராம். சனிக்கிழமை வழக்கம்போல் கல்லூரிக்குச் சென்ற பிச்சைமணி வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் பிச்சைமணியை காணாததால் தந்தை பெத்தன்ராஜ், வத்திராயிருப்பு காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீஸார் வழக்குப் பதிவு செய்து காணாமல் போன பிச்சைமணியைத் தேடி வருகிறார்கள்.

முழு கட்டுரையைப் படிக்க →