குடிநீர் கேட்டு 1000க்கும் மேற்பட்ட பெண்கள் ஆட்சியரை முற்றுகை
தூத்துக்குடி மாவட்டம் மாப்பிள்ளையூரணி ஊராட்சியைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள், குடிநீர் விநியோகத்தை முறைப்படுத்தி, கு
தூத்துக்குடி மாவட்டம் மாப்பிள்ளையூரணி ஊராட்சியைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள், குடிநீர் விநியோகத்தை முறைப்படுத்தி, குடிநீர் வழங்கக் கோரி, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள், அனைத்து மகளிர் மன்றம் என்ற பெயரில் இந்த முற்றுகைப் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். அவர்களை போலீஸார் கலைந்து செல்லுமாறு சொல்லியும் அவர்கள் கலைந்து செல்ல வில்லை. இதனால் அவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.