முகப்பு
தற்போதைய செய்திகள்

பொள்ளாச்சியில் வேன் விபத்து: சென்னை ஐயப்ப பக்தர்கள் 14 பேர் காயம்

பொள்ளாச்சியில் ஐயப்ப பக்தர்கள் வந்த வேன் ஒன்று விபத்துக்கு உள்ளானதில் 14 பேர் காயம் அடைந்தனர்.

Updated On : 3 ஜனவரி, 2024 at 9:55 AM
பகிர்:

பொள்ளாச்சியில் ஐயப்ப பக்தர்கள் வந்த வேன் ஒன்று விபத்துக்கு உள்ளானதில் 14 பேர் காயம் அடைந்தனர்.

சென்னை புது  வண்ணாரப் பேட்டையைச் சேந்த 17 பேர் கொண்ட குழுவினர் பொள்ளாச்சி வழியாக பாலக்காடு சென்றுகொண்டிருந்தனர். அவர்கள் வந்த வேன் பொள்ளாச்சி ரயில்வே கேட் அருகே எதிரே வந்த லாரி ஒன்றுடன் மோதி விபத்துக்கு உள்ளானது. இதில், வேனில் பயணம் செய்த ஐயப்ப பக்தர்கள் 14 பேர் காயம் அடைந்தனர். இவர்கள் அனைவரும் பொள்ளாச்சி தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.