முகப்பு
தற்போதைய செய்திகள்

ஸ்ரீவில்லிபுத்தூர் ஒன்றியத்தில் 117 ஆழ்துளை கிணறு அமைக்க போர்க்கால நடவடிக்கை: ஒன்றியக் குழுத் தலைவர்

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு 117 ஆழ்துளைக் கிணறுகள் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று

தற்போதைய செய்திகள்

ஸ்ரீவில்லிபுத்தூர் ஒன்றியத்தில் 117 ஆழ்துளை கிணறு அமைக்க போர்க்கால நடவடிக்கை: ஒன்றியக் குழுத் தலைவர்

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு 117 ஆழ்துளைக் கிணறுகள் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று

Updated On : 3 ஜனவரி, 2024 at 10:01 AM
பகிர்:

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு 117 ஆழ்துளைக் கிணறுகள் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாக ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் கே.காளிமுத்து கூறினார்.

ஸ்ரீவில்லிபுத்தூர் ஒன்றியம், திருவண்ணாமலை ஊராட்சி, இந்திராநகரில் ஆழ்துளைக் கிணறு அமைக்கப்பட்டு, அதில் அமைக்கப்பட்ட குடிநீர் தொட்டியை திறந்து வைத்து ஒன்றியக் குழுத் தலைவர் காளிமுத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது: ஸ்ரீவில்லிபுத்தூர் ஒன்றியப் பகுதியில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உத்தரவுபடி பல்வேறு மக்கள் நலத்திட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது. முதல்வரின் எண்ணங்களை நிறைவேற்றும் வகையில் ஏழை, எளிய, தேவையில் உள்ள கிராம மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்ற ஸ்ரீவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் உயர் முன்னுரிமை அளிக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருவதாகத் தெரிவித்தார்.

விழாவிற்கு ஊர் தலைவர் ரவி தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் ஒன்றியக் குழு துணைத் தலைவர் முத்தாலம்மாள் ராமசாமி, ஒன்றிய கவுன்சிலர்கள் மாரிமுத்து, மயில்ராவணன், மீனா, சித்திரவேல், திருவள்ளுவன், ஆணையாளர் வெள்ளைச்சாமி, வட்டார வளர்ச்சி அலுவலர் சந்திரசேகரன், அ.தி.மு.க. கிளைச் செயலாளர் நடராஜன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள், கிராம மக்கள் கலந்து கொண்டனர்.

முழு கட்டுரையைப் படிக்க →