பஸ் பயணியிடம் இருந்த நான்கே முக்கால் பவுன் நகைகள் மாயம்!
நாகை மாவட்டம் சீர்காழி காமராஜ்புரத்தைச் சேர்ந்த சாலமோன்ராஜா(34) தனது குடும்பத்துடன் கோயம்புத்தூரிலிருந்து சீர்காழி வழியாக சிதம்பரம் நோக்கி வந்த ஆம்னி பஸ்ஸில் புதன்கிழமை
நாகை மாவட்டம் சீர்காழி காமராஜ்புரத்தைச் சேர்ந்த சாலமோன்ராஜா(34) தனது குடும்பத்துடன் கோயம்புத்தூரிலிருந்து சீர்காழி வழியாக சிதம்பரம் நோக்கி வந்த ஆம்னி பஸ்ஸில் புதன்கிழமை பயணித்துள்ளார்.
சிதம்பரம் பஸ்நிலையம் வந்து இறங்கிய போது தனது பையிலிருந்த நான்கே முக்கால் பவுன் நகைகளை காணாமல் போனது கண்டு அதிர்ச்சியுற்றார். காணாமல் போன நகைகளின் மதிப்பு ரூ.50 ஆயிரமாகும். இதுகுறித்த புகாரின் பேரில் நகர போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.