சூரிய மின்சக்தி அமைத்தால் அரசு உதவும்: அமைச்சர் நத்தம் விஸ்வநாதன்
சூரிய மின் சக்தி பேனல்கள் அமைத்து, மின்சாரம் தயாரிக்க முயற்சி செய்யும் தனியாருக்கு தேவையான மின்மாற்றி தடங்களை அரசே செய்து தரும் என்றார் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன்.
சூரிய மின் சக்தி பேனல்கள் அமைத்து, மின்சாரம் தயாரிக்க முயற்சி செய்யும் தனியாருக்கு தேவையான மின்மாற்றி தடங்களை அரசே செய்து தரும் என்றார் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன்.
இன்று கோவை கொடீசியாவில் நடந்த சூரிய மின்சக்தி தயாரிப்பு குறித்த கண்காட்சியில் கலந்துகொண்டு பேசிய அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் இதனைத் தெரிவித்தார். மேலும் அவர், தமிழ்நாடு முழுவதும் சமச்சீர் மின்வெட்டு இருந்தால் யாருக்குமே பலன் இருக்காது என்றும் கூறினார்.