முகப்பு
தற்போதைய செய்திகள்

தேவகோட்டை அருகே சுவர் இடிந்து மாணவன் பலி

தேவகோட்டை அருகேயுள்ளது மஞ்சனி கிராமம். இந்த கிராமத்தை சேர்ந்த பெத்தபெருமாள் மகன் சந்தோஷ்(வயது14). இவர் அருகில் உள்ள நாகனி ஊராட்சி ஒன்றிய பள்ளியில் எட்டாம்வகுப்பு பயின்று வருகிறார். இவர் நான்கு நாட்களுக்கு முன்பு அருகில் உள்ள மோட்டார் அறை தொட்டிக்கு குளிக்க சென்றுள்ளார். அந்த தொட்டியில் ஏற

Updated On : 3 ஜனவரி, 2024 at 10:11 AM
பகிர்:

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே சுவர் இடிந்து மாணவன் பலியானார்.

தேவகோட்டை அருகேயுள்ளது மஞ்சனி கிராமம். இந்த கிராமத்தை சேர்ந்த பெத்தபெருமாள் மகன் சந்தோஷ்(வயது14). இவர் அருகில் உள்ள நாகனி ஊராட்சி ஒன்றிய பள்ளியில் எட்டாம்வகுப்பு பயின்று வருகிறார். இவர் நான்கு நாட்களுக்கு முன்பு அருகில் உள்ள மோட்டார் அறை தொட்டிக்கு குளிக்க சென்றுள்ளார். அந்த தொட்டியில் ஏற முயன்றபோது சுவர் இடிந்து அவர் மீது விழுந்துள்ளது. இதில் பலத்த காயமுற்ற அவரை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். ஆனால்  சிகிச்சை பலனின்றி அவர் இறந்துபோனார். இதுகுறித்து தாலுகா எஸ்.ஐ இளஞ்செழியன் விசாரனை நடத்தினார்.

முழு கட்டுரையைப் படிக்க →