முகப்பு
தற்போதைய செய்திகள்

நயினாரகரத்தில் சாலை மறியல்:போக்குவரத்து பாதிப்பு

நயினாரகரத்தில் சனிக்கிழமை தோறும் மாட்டுச் சந்தை செயல்பட்டு வருகிறது. இங்கிருந்து ஏராளமான மாடுகள் கேரளாவிற்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.கடந்த சில மாதங்களாக இந்த சந்தையிலிருந்து வாங்கும் மாடுகளை வாகனங்கள் மூலம் கேரளாவிற்கு கொண்டு செலவது அதிகரித்துள்ளதாம்.இதன் காரணமாக வாகனங்கள்

Updated On : 3 ஜனவரி, 2024 at 10:11 AM
பகிர்:

தென்காசி அருகேயுள்ள நயினாரகரத்தில் மாடு விற்பனையாளர்கள்  மேற்கொண்ட திடீர் சாலை மறியலால் சுமார் 20 நிமிடங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

நயினாரகரத்தில் சனிக்கிழமை தோறும் மாட்டுச் சந்தை செயல்பட்டு வருகிறது. இங்கிருந்து ஏராளமான மாடுகள் கேரளாவிற்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.கடந்த சில மாதங்களாக இந்த சந்தையிலிருந்து வாங்கும் மாடுகளை வாகனங்கள் மூலம் கேரளாவிற்கு கொண்டு செலவது அதிகரித்துள்ளதாம்.இதன் காரணமாக வாகனங்கள் இல்லாமல் மாடுகளை கால்நடையாகவே கேரளாவிற்கு கொண்டு சென்று விற்பனை செய்து வரும் சிறு வியாபாரிகளுக்கு பாதிப்பு ஏற்பட்டு வருகிறதாம்.

அதனால்,வாகனங்கள் மூலம் கேரளாவிற்கு மாடுகளை ஏற்றிச் செல்வதை தடுக்க வலியுறுத்தி சிறு மாடு வியாபாரிகள் திடீரென்று நயினாரகரம் சந்தை அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர்.இதன் காரணமாக தென்காசி-மதுரை சாலையி்ல சுமார் 20 நிமிடங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.தகவலறிந்த தென்காசி டி.எஸ்.பி. பாண்டியராஜன்,இலத்தூர் காவல் உதவி ஆய்வாளர் செல்வி ஆகியோர்,மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேசியதையடுத்து அவர்கள் மறியலை கைவிட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.