முகப்பு
தற்போதைய செய்திகள்

தூத்துக்குடி மாநகராட்சிக் கூட்டத்தில் அதிமுக-திமுக உறுப்பினர்கள் தர்ணா

தூத்துக்குடி மாநகராட்சிக் கூட்டத்தில் அதிமுக- திமுக உறுப்பினர்களுக்கிடையே வாக்குவாதம் எழுந்தது. இதன்பின்னர் அவர்கள் அவையின் நடுப்பகுதிக்குச் சென்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Updated On : 3 ஜனவரி, 2024 at 10:15 AM
பகிர்:

தூத்துக்குடி மாநகராட்சிக் கூட்டத்தில் அதிமுக- திமுக உறுப்பினர்களுக்கிடையே வாக்குவாதம் எழுந்தது. இதன்பின்னர் அவர்கள் அவையின் நடுப்பகுதிக்குச் சென்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அண்மையில் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்ட நிகழ்ச்சிக்காக பந்தல் அமைப்பது தொடர்பாக பிரச்னை எழுந்தது, அப்போது, மாநகராட்சி ஆணையர் இடத்தை மாற்றம் செய்து உத்தரவிட்டாராம். அதனால் வேறு ஒரு இடத்தில் கூட்டம் நடந்துள்ளது.

இதற்கு கேலி செய்யும் விதமாக இன்று மாநகராட்சி மன்றக் கூட்டத்துக்கு வந்திருந்த திமுக உறுப்பினர்கள், கறுப்புச் சட்டை அணிந்து, ஆணையருக்கு நன்றி; ஆணையர் உத்தரவால் கூட்டம் புதிய இடத்தில் மிகச் சிறப்பாக நடந்தது என்று பதாகைகளைப் பிடித்தனர். இதற்கு அதிமுக உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்து பேப்பரில் எழுதிக் காண்பித்தனர். இதனால் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. அனைவரும் மேயர் இருக்கைக்கு முன்னர் அமர்ந்து தர்ணா செய்தனர்.

இந்நிலையில், மேயர் இருக்கையை விட்டு எழுந்து சென்றார். செல்லும் போது, இன்றைய தீர்மானங்கள் அனைத்தும் நிறைவேற்றம் (ஆல் பாஸ்ட்) என்று கூறிச் சென்றாராம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.