அறநிலையத்துறை துணை ஆணையர் மிரட்டல்: வேலூர் கோயில் பாதுகாப்புக் குழு உறுப்பினர் புகார்
வேலூரில் கோட்டை ஜலகண்டேஸ்வரர் கோயில் அறநிலையத்துறை துணை ஆணையர் தன்னை மிரட்டியதாக புகார் கொடுத்துள்ளார் ஜலகண்டேஸ்வரர் கோயில் பாதுகாப்புக் கமிட்டி உறுப்பினர் ஒருவர்.
வேலூரில் கோட்டை ஜலகண்டேஸ்வரர் கோயில் அறநிலையத்துறை துணை ஆணையர் தன்னை மிரட்டியதாக புகார் கொடுத்துள்ளார் ஜலகண்டேஸ்வரர் கோயில் பாதுகாப்புக் கமிட்டி உறுப்பினர் ஒருவர்.
வேலூர் வடக்கு போலீஸில் அவர் இந்தப் புகாரை அளித்துள்ளார். அண்மையில் வேலூர் கோட்டை ஜலகண்டேஸ்வரர் கோயிலை இந்திய தொல்பொருள் ஆய்வுத் துறையிடம் இருந்து தமிழக இந்து சமய அறநிலைய ஆட்சித் துறை கோயில் பொறுப்பை எடுத்துக் கொண்டது. இதை அடுத்து, அங்கே பலத்த போராட்டங்கள் நடைபெற்று வந்தன.