அனுமதியின்றி நாட்டுதுப்பாக்கி வைத்திருந்த வாலிபர் கைது.
நாட்டறம்பள்ளி அருகே அனுமதியின்றி நாட்டுதுப்பாக்கி வைத்திருந்த வாலிபரை நாட்டறம்பள்ளி போலீசார் கைது செய்தனர்.
தற்போதைய செய்திகள்அனுமதியின்றி நாட்டுதுப்பாக்கி வைத்திருந்த வாலிபர் கைது.
நாட்டறம்பள்ளி அருகே அனுமதியின்றி நாட்டுதுப்பாக்கி வைத்திருந்த வாலிபரை நாட்டறம்பள்ளி போலீசார் கைது செய்தனர்.
நாட்டறம்பள்ளி அருகே அனுமதியின்றி நாட்டுதுப்பாக்கி வைத்திருந்த வாலிபரை நாட்டறம்பள்ளி போலீசார் கைது செய்தனர்.
நாட்டறம்பள்ளி காவல் ஆய்வாளர் பழனி, தனிப்படை உதவி ஆய்வாளர் ஏழுமலை மற்றும் போலீசார் சனிக்கிழமை மாலை கொத்தூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுப்பட்டிருந்தனர். அப்போது கொத்தூர் இரயில்வே கேட் அருகே துப்பாக்கியை வைத்துக் கொண்டு நின்றிருந்த வாலிபரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் காளிகான் வட்டத்தை சேர்ந்த முருகன் என்பவரின் மகன் தினேஷ்(21) என்பதும், அவர் எவ்வித அனுமதியின்றி நாட்டு துப்பாக்கியை வைத்திருந்தது தெரிய வந்தது. இதனையடுத்து நாட்டறம்பள்ளி போலீசார் துப்பாக்கியை பறிமுதல் செய்து தினேஷ் மீது வழக்கு பதிந்து அவரை திருப்பத்தூர் சிறையில் அடைத்தனர்.