முகப்பு
தற்போதைய செய்திகள்

பெண் சாராய வியாபாரி குண்டர் சட்டத்தில் கைது.

பிரபல பெண் சாராய வியாபாரி  குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.நாட்டறம்பள்ளி அடுத்த புதுபேட்டை கிழக்குமேடு பகுதியை சேர்ந்தவர் அலமேலு(36) பிரபல சாராய

தற்போதைய செய்திகள்

பெண் சாராய வியாபாரி குண்டர் சட்டத்தில் கைது.

பிரபல பெண் சாராய வியாபாரி  குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.நாட்டறம்பள்ளி அடுத்த புதுபேட்டை கிழக்குமேடு பகுதியை சேர்ந்தவர் அலமேலு(36) பிரபல சாராய

Updated On : 3 ஜனவரி, 2024 at 12:46 PM
பகிர்:

பிரபல பெண் சாராய வியாபாரி  குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

நாட்டறம்பள்ளி அடுத்த புதுபேட்டை கிழக்குமேடு பகுதியை சேர்ந்தவர் அலமேலு(36) பிரபல சாராய வியாபாரி. இவர் மீது நாட்டறம்பள்ளி காவல் நிலையத்தில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் கடந்த மாதம் சாராயம் விற்பனை செய்தபோது நாட்டறம்பள்ளி காவல் ஆய்வாளர் பழனி மற்றும் போலீசாரால் கைது செய்யப்பட்டார். மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து திருப்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். தொடர்ந்து அலமேலு கள்ளசாராயம் விற்பனை செய்து வந்ததால் அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார். இதன் மீது விசாராணை நடத்திய மாவட்ட ஆட்சியர் பொ.சங்கர் அலமேலுவை குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். அதன் பேரில் அலமேலு குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு வேலூர் பெண்கள் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

முழு கட்டுரையைப் படிக்க →