வாய்க்காலில் குழந்தையுடன் 30 வயது பெண் சடலம் கண்டெடுப்பு
சிதம்பரம் அருகே சீர்காழி செல்லும் புறவழிச்சாலையில் கூத்தன்கோயில் எனுமிடத்தில் வடிகால் வாய்க்காலில் 30 வயது மதிக்கக்தக்க பெண், 2 வயது குழந்தை ஆகிய இருவரின் சடலம் அழுகிய நிலையில் இன்று மாலை
சிதம்பரம் அருகே சீர்காழி செல்லும் புறவழிச்சாலையில் கூத்தன்கோயில் எனுமிடத்தில் வடிகால் வாய்க்காலில் 30 வயது மதிக்கக்தக்க பெண், 2 வயது குழந்தை ஆகிய இருவரின் சடலம் அழுகிய நிலையில் இன்று மாலை கண்டெடுக்கப்பட்டது.
தகவல் அறிந்த சிதம்பரம் டிஎஸ்பி ஆர்.ராஜாராம் மற்றும் அண்ணாமலைநகர் போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டுள்ளனர். இறந்து போன பெண் சுடிதார் அணிந்துள்ளார். குழந்தைக்கு பேன்ட், சட்டை போடப்பட்டுள்ளது. இருவரும் கொலை செய்யப்பட்டு இறந்தனரா என போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.