முகப்பு
தற்போதைய செய்திகள்

கார் மோதி முதியவர் சாவு

பட்டுக்கோட்டையை அடுத்த சஞ்சாயநகரைச் சேர்ந்த விவசாயி எஸ். மைக்கேல் (70). இவர் இன்று காலை தனது தென்னந்தோப்பிற்கு சைக்கிளில் சென்றார். வீரக்குறிச்சி பிரதான சாலையில் சென்று

Updated On : 3 ஜனவரி, 2024 at 12:47 PM
பகிர்:

பட்டுக்கோட்டை அருகே கார் மோதியதில் சைக்கிளில் சென்ற முதியவர் உயிரிழந்தார்.

பட்டுக்கோட்டையை அடுத்த சஞ்சாயநகரைச் சேர்ந்த விவசாயி எஸ். மைக்கேல் (70). இவர் இன்று காலை தனது தென்னந்தோப்பிற்கு சைக்கிளில் சென்றார். வீரக்குறிச்சி பிரதான சாலையில் சென்று கொண்டிருந்தபோது பின்னால் வந்த கார் இவர் சைக்கிள் மீது மோதியதாம். இதில் நிலைதடுமாறி கீழே விழுந்து பலத்த காயமடைந்த மைக்கேல் அதேயிடத்தில் இறந்தார்.

இது குறித்து பட்டுக்கோட்டை தாலுகா காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

முழு கட்டுரையைப் படிக்க →