தற்போதைய செய்திகள்

ராஜபாளையம் நகராட்சியில் காலிப் பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் பரிந்துரை

விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் நகராட்சியில் பணி ஆய்வாளர், குழாய் பொருத்துநர், குழாய் திருகுநர், இளநிலை உதவியாளர், ஓட்டுநர், துப்புரவு பணியாளர், துப்புரவு பணி மேற்பார்வையாளர், நகரமைப்பு

எஸ். பாண்டியன்

ராஜபாளையம் நகராட்சியில் காலிப்பணியிடங்களுக்கு தகுதியானவர்களை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் இணைய தளம் வழியாக பரிந்துரை செய்யப்பட இருக்கிறது.

இது குறித்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் திருமலைச்செல்வி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்:

விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் நகராட்சியில் பணி ஆய்வாளர், குழாய் பொருத்துநர், குழாய் திருகுநர், இளநிலை உதவியாளர், ஓட்டுநர், துப்புரவு பணியாளர், துப்புரவு பணி மேற்பார்வையாளர், நகரமைப்பு ஆய்வர் மற்றும் வருவாய் உதவியாளர் போன்ற பணியிடங்கள் காலியாக உள்ளது. இப்பணியிடங்களுக்கு விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலமாக இந்த நகராட்சியின் எல்லைப்பகுதியில் உள்ள தகுதியானவர்களின் பெயர் இணைய தளம் மூலம் பரிந்துரை செய்யப்பட இருக்கிறது.

எனவே உத்தேச பதிவு மூப்பு பட்டியலில் குறிப்பிட்ட பதிவு மூப்பிற்குள் விடுபட்ட பதிவுதாரர்கள் மட்டும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு வருகிற 25,26 ஆகிய நாள்களில் அனைத்து சான்றிதழ்களுடன் நேரில் வந்து சரிபார்த்துக் கொள்ளலாம். அதேபோல், பரிந்துரை செய்யப்படும் உத்தேச பதிவு மூப்பு பட்டியலினை குறிப்பிட்ட www.virudhunagar.tn.nic.in என்ற இணையதளத்தில் சரிபார்த்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. இணையதள முகவரியில் இடம் பெற்றுள்ள பதிவுதாரர்கள் நேரில் அலுவலகத்திற்கு வரத்தேவையில்லை என மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் திருமலைச்செல்வி தெரிவித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அரபு நாடுகளின் பகுதிகள் மீது இஸ்ரேலுக்கு உரிமை?

நமோ பாரத் ரயில் பாதை திட்டம் தில்லியின் வளா்ச்சியை அதிகரிக்கும்: முதல்வா் ரேகா குப்தா

ஒடிஸா: 7-ஆம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த 5 ஆசிரியா்கள் கைது

பைக்கில் சென்ற பெண்ணின் நகை பறிப்பு

தில்லியில் பயங்கரவாத சதி: வங்கதேசத்தினா் உள்பட 8 போ் கைது

SCROLL FOR NEXT