சேலம் மத்திய சிறைக்குள் மீண்டும் கஞ்சா பொட்டலங்கள் வீச்சு
சேலம் மத்திய சிறைக்குள் ஞாயிற்றுக்கிழமை கஞ்சா பொட்டலங்கள் வீசப்பட்டது குறித்து அஸ்தம்பட்டி காவல்துறையினர் விசாரிக்கின்றனர்.
சேலம் மத்திய சிறைக்குள் ஞாயிற்றுக்கிழமை கஞ்சா பொட்டலங்கள் வீசப்பட்டது குறித்து அஸ்தம்பட்டி காவல்துறையினர் விசாரிக்கின்றனர்.
சேலம் மத்திய சிறைக்குள் கடந்த சில வாரங்களில் பல முறை கஞ்சா பொட்டலங்கள் வீசப்பட்டுள்ளன. அதன் தொடர்ச்சியாக ஞாயிற்றுக்கிழமை இரவு சிறையின் பின்பகுதியில் உள்ள உடையார் காடு பகுதியில் இருந்து மீண்டும் 3 கஞ்சா பொட்டலங்கள் வீசப்பட்டுள்ளன. இதை திங்கள்கிழமை காலை கண்ட சிறைக் காவலர்கள் இது குறித்து சிறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.
அந்த 3 பொட்டலங்களிலும் சேர்த்து சுமார் 50 கிராம் கஞ்சா இருந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து ஜெயிலர் கிருஷ்ணன், அஸ்தம்பட்டி காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார். இதற்கிடையே திங்கள்கிழமை சிறையில் இருந்து நீதிமன்றத்துக்கு அழைத்துவரப்பட்ட ஒரு கைதியிடம் சோதனை நடத்தியதில் கஞ்சா பொட்டலம் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக சிறைக் காவலர்கள் விசாரணை நடத்துகின்றனர்.
Advertisement