முகப்பு
தற்போதைய செய்திகள்

டிராக்டர் கவிழ்ந்து 30 பேர் காயம்

திருக்கோவிலூர் அருகே டிராக்டர் கவிழ்ந்து தொழிலாளர்கள் 30 பேர் வியாழக்கிழமை காயமடைந்தனர்.

Updated On : 3 ஜனவரி, 2024 at 12:04 PM
பகிர்:

.திருக்கோவிலூர் அருகே டிராக்டர் கவிழ்ந்து தொழிலாளர்கள் 30 பேர் வியாழக்கிழமை காயமடைந்தனர்.

திருக்கோவிலூரை அடுத்த காட்டுஎடையார் கிராமத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் 30 பேர், முனிவாழை கிராமத்துக்கு கரும்பு வெட்டுவதற்கு சென்றனர். பின் வேலை முடிந்து டிராக்டரில் வீட்டுக்கு வந்தனர்.

அப்போது காட்டுஎடையார் கூட்டுச்சாலை அருகே எதிர்பாராதவிதமாக டிராக்டர் சாலையோரத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இச்சம்பவத்தால் டிராக்டரில் வந்த தொழிலாளர்கள் 30 பேர் காயமடைந்தனர். இதையடுத்து இவர்கள் திருக்கோவிலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

இதில் தண்டபாணி மகள் விஜயசாந்தி(20), கண்ணன் மனைவி சேவாத்தாள்(40) ஆகியோர் மேல் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

இதுகுறித்து ரிஷிவந்தியம் காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

முழு கட்டுரையைப் படிக்க →