கைதிகளிடம் பணப் பரிமாற்றத்துக்கு உதவிய தலைமை சிறைக் காவலர் விஸ்வநாதன் இடைநீக்கம் செய்யப்பட்டார்.
மதுரை மத்திய சிறையில் செல்போன், கஞ்சா, பணம் ஆகியவை சரளமாக பரிமாற்றம் செய்யப்படுவதாக புகார்கள் எழுந்தன., இதை அடுத்து, கைதிகள் இருவரிடம் இருந்து பணம் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டது. இதில், சிறையில் உள்ளவர்களே இந்தச் செயல்களுக்கு உதவுவதாக தெரிய வந்தது. இதை அடுத்து, தீவிர கண்காணிப்பில் ஈடுபட்ட சிறைத்துறை அதிகாரிகள், சிறை வார்டன் மற்றும் சிறைக் காவலர் மூலம் பொருள்கள் பரிமாறப்படுவது குறித்து அறிந்தனர். இதன்பின்னர், ஒரு கைதியிடம் பணம் பெற்றதாக சிறைத்துறை தலைமை ஏட்டு விஸ்வநாதன் என்பவரைப் பணியிடைநீக்கம் செய்துள்ளனர் சிறைத் துறை அதிகாரிகள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.