முகப்பு
தற்போதைய செய்திகள்

கடலூரில் சிசேரியன் செய்யப்பட்ட பெண் மரணம் : உறவினர்கள் போராட்டம்

கடலூர் பொது மருத்துவமனையில் சிசேரியன் செய்யப்பட்ட பெண் மரணம் அடைந்ததை அடுத்து உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

Updated On : 7 ஜூன், 2013 at 12:41 PM
பகிர்:
Updated On : 3 ஜனவரி, 2024 at 5:35 PM

கடலூர் பொது மருத்துவமனையில் சிசேரியன் செய்யப்பட்ட பெண் மரணம் அடைந்ததை அடுத்து உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

கடலூர் மேற்கு ராமாபுரம் பகுதியைச் சேர்ந்த வெங்கடேசன் என்பவரின் மனைவி வாசுகி (30). இவர் நிறைமாத கர்பிணியாக இருந்த நிலையில், பிரசவத்துக்காக நேற்று இரவு கடலுர் பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இவருக்கு சிசேரியன் அறுவை சிகிச்சை மூலம் ஆண் குழந்தை பிறந்தது.

இந்த நிலையில், அவருக்கு அதிகமான ரத்தப் போக்கு ஏற்பட்டதால், ரத்தம் போதவில்லை என்று உறவினர்களிடம் வெளியில் இருந்து ரத்தம் வாங்கி வரச் சொல்லி மருத்துவர்கள் அறிவுறுத்தினர்.

Advertisement

இதற்கிடையே மருத்துவமனையில் இருந்த ரத்தத்தை மருத்துவர்கள் வாசுகிக்கு செலுத்தியுள்ளனர். எனினும், இன்று காலை 9 மணிக்கு வாசுகி உயிரிழந்து விட்டார்.

இது குறித்து அறிந்ததும், வாசுகியின் உறவினர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். வாசுகியின் உடலை வாங்க மறுத்து மருத்துவமனை முன்பு போராட்டம் நடத்தினர். போராட்டம் நடத்திய உறவினர்களுடன் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.