டாஸ்மாக் பாரில் மது விற்றவர் கைது
வந்தவாசி பஜார்வீதி-தாலுக்கா அலுவலகம் சாலை சந்திப்பில் உள்ள அரசு டாஸ்மாக் மதுக்கடை பாரில் வந்தவாசி தெற்கு போலீஸார் சனிக்கிழமை சோதனை மேற்கொண்டனர்.
வந்தவாசியில் டாஸ்மாக் பாரில் மது விற்றவர் சனிக்கிழமை கைது செய்யப்பட்டார்.
வந்தவாசி பஜார்வீதி-தாலுக்கா அலுவலகம் சாலை சந்திப்பில் உள்ள அரசு டாஸ்மாக் மதுக்கடை பாரில் வந்தவாசி தெற்கு போலீஸார் சனிக்கிழமை சோதனை மேற்கொண்டனர். இதில் அந்த டாஸ்மாக் பாரில் மது விற்பது தெரியவந்தது. இதையடுத்து பார் ஊழியரான மேட்டு எச்சூரைச் சேர்ந்த ஏழுமலையை(45) போலீஸார் கைது செய்தனர். மேலும் 5 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.