கடலூர் மத்திய சிறையில் பாமகவினர் 16 பேர் உண்ணாவிரதம்
கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் பாமகவினர் 16 பேர் இன்று காலை முதல் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
Updated On : 3 ஜனவரி, 2024 at 3:13 PM
கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் பாமகவினர் 16 பேர் இன்று காலை முதல் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
சிறையில் அடிப்படை வசதிகளை செய்து தரக் கோரியும், வெளியில் இருந்து மாற்றுத் துணியைப் பெற்றுக் கொள்ள அனுமதிக்கக் கோரியும், உடல் நலம் பாதித்துள்ளவர்களுக்கு முறையான சிகிச்சை அளிக்கப்படவில்லை என்று கூறி பாமகவினர் 16 பேர் இன்று காலை முதல் அவர்களுக்கு அளிக்கப்பட்ட உணவை சாப்பிடாமல் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.