சிதம்பரம் அருகே கிராம உதவியாளர் கொலை!
சிதம்பரம் அருகே உள்ள பூலாமேடு கிராமத்தைச் சேர்ந்தவர் சண்முகவேலு (45). கிராம உதவியாளராக பணியாற்றும் இவரது வீடு அருகே இன்று பக்கத்து வீட்டைச் சேர்ந்த குமார்
சிதம்பரம் அருகே ஆடு மேய்த்த தகராறில் கிராம உதவியாளர் ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்டார்.
சிதம்பரம் அருகே உள்ள பூலாமேடு கிராமத்தைச் சேர்ந்தவர் சண்முகவேலு (45). கிராம உதவியாளராக பணியாற்றும் இவரது வீடு அருகே இன்று பக்கத்து வீட்டைச் சேர்ந்த குமார் என்பவருக்கு சொந்தமான ஆடு மேய்ந்து கொண்டிருந்தது. இதனை பார்த்த சண்முகவேலு, குமாரிடம் ஆடு எப்படி இங்கு வந்து மேயலாம் எனக் கேட்டுள்ளார். இதில் ஏற்பட்ட தாகராறில் குமார் தாக்கியதில் சண்முகவேலு சம்பவ இடத்திலேயே இறந்தார். இதுகுறித்து சிதம்பரம் தாலுக்கா போலீஸார் வழக்குப் பதிந்து குமாரை (35) கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.