மணிமுத்தாறு அருவியில் திடீர் வெள்ளம்
இன்றைய காலை நிலவரப்படி பாபநாசம் அணையில் 86 மி.மீ மழையும்,பாபநாசம் கீழ் அணையில் 11 மி.மீ மழையும், சேர்வலாறு அணையில் 67 மி.மீமழையும், மணிமுத்தாறு அணையில் 5.4 மி.மீ மழையும், கடனாநதி
திருநெல்வேலி மாவட்டம், மணிமுத்தாறு அருவியில் திடீரென இன்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
மேற்குத் தொடர்ச்சி மலையில் அணைகளின் நீர்பிடிப்பு பகுதியில் மழை பெய்து வருகிறது. இதையடுத்து அணைகளின் நீர்வரத்து அதிகரித்து நீர்மட்டமும் உயர்ந்து வருகிறது.
இன்றைய காலை நிலவரப்படி பாபநாசம் அணையில் 86 மி.மீ மழையும்,பாபநாசம் கீழ் அணையில் 11 மி.மீ மழையும், சேர்வலாறு அணையில் 67 மி.மீமழையும், மணிமுத்தாறு அணையில் 5.4 மி.மீ மழையும், கடனாநதி அணையில் 12 மி.மீ மழையும், ராமநதி அணையில் 4 மி.மீ மழையும் பதிவாகியுள்ளது. மணிமுத்தாறு அருவியில் கடந்த சில தினங்களாக வழக்கத்தை விட தண்ணீர் அதிகம் இருந்தது. இன்று நண்பகலி்ல் திடீரென அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் தண்ணீர் அதிகம் கொட்டும் பகுதியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படவில்லை.