முகப்பு
தற்போதைய செய்திகள்

கட்டிட தொழிலாளி வீட்டில் நகை திருட்டு : பெண் கைது

ஆம்பூர் அருகே கட்டிட தொழிலாளி வீட்டில் தங்க நகை திருடிய பெண்ணை போலீஸார் வெள்ளிக்கிழமை இரவு கைது செய்தனர்.

Updated On : 15 ஜூன், 2013 at 11:57 PM
பகிர்:

ஆம்பூர் அருகே கட்டிட தொழிலாளி வீட்டில் தங்க நகை திருடிய பெண்ணை போலீஸார் வெள்ளிக்கிழமை இரவு கைது செய்தனர்.ஆம்பூர் அருகே ஆலாங்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் கட்டிட தொழிலாளி சுந்தர்ராஜன் (36).  இவர் கடந்த மாதம் வீட்டை பூட்டிக் கொண்டு வேலைக்கு சென்றுள்ளார்.  திரும்பி வந்து பார்த்தபோது வீட்டில் வைக்கப்பட்டிருந்த 4.5 சவரன் தங்க நகை திருட்டு போயிருந்தது.  இதுகுறித்து ஆம்பூர் தாலுகா போலீஸில் புகார் செய்தார்.  புகாரின் பேரில் போலீஸார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர்.  விசாரணையில் அதே பகுதியை சேர்ந்த மகாலட்சுமி (34) நகையை திருடியது தெரியவந்தது.  அதன்பேரில் அவரை போலீஸார் கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.