சிதம்பரம் அரசு மருத்துவமனையில் ரூ.35 ஆயிரம் செலவில் சிசி கேமராக்கள் பொருத்தம்!
தமிழகத்தில் ஒரு சில தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் குழந்தை கடத்தல் சம்பவம் நடைபெற்றதை அடுத்து சிதம்பரம் காமராஜர் அரசு மருத்துவமனையில் பிரசவஅறை, குழந்தைகள் தீவிர சிகிச்சை பிரிவு, தாய்சேய்
குழந்தை கடத்தல் உள்ளிட்ட குற்றங்களை தடுக்க சிதம்பரம் காமராஜர் அரசு மருத்துவமனையில் ரூ.35 ஆயிரம் செலவில் 4 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் (சிசி கேமராக்கள்) மற்றும் டிவிக்கள் பொருத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து மருத்துவமனை தலைமை மருத்துவர் சுகுமார் தெரிவித்ததாவது:
தமிழகத்தில் ஒரு சில தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் குழந்தை கடத்தல் சம்பவம் நடைபெற்றதை அடுத்து சிதம்பரம் காமராஜர் அரசு மருத்துவமனையில் பிரசவஅறை, குழந்தைகள் தீவிர சிகிச்சை பிரிவு, தாய்சேய் நல பிரிவு, மருத்துவமனை வராண்டா ஆகிய 4 பகுதிகளில் கண்காணிக்க சிசி கேமராக்கள் மற்றும் டிவி பொருத்தப்பட்டுள்ளது. மேலும் புதிய மருத்துவமனை கட்டடத்தில் கீழ் தளத்தில் 5 கேரமாக்களும், மேல் தளத்தில் 4 கேமராக்களும் பொருத்தப்படவுள்ளது. மேலும் மருத்துவமனையில் இதுநாள் வரை சிலிண்டர் மூலம் நோயாளிகளுக்கு ஆக்ஸிஜன் செலுத்தப்பட்டு வந்தது. தற்போது புதிய கட்டடத்தில் பைப் லைன் மூலம் ஆக்ஸிஜன் வழங்க ஒவ்வொரு படுக்கைக்கும் ஆக்ஸிஜன் பைப் லைன் பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது. விரைவில் பைப் லைன் மூலம் ஆக்ஸிஜன் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என்றார் டாக்டர் சுகுமார்.