முகப்பு
தற்போதைய செய்திகள்

ரேஷன் கடையை முற்றுகையிட்ட மக்கள்!

சிதம்பரம் பரமேஸ்வரநல்லூர் பகுதியில் வி.எஸ்.ஆர் நகரில் ரேஷன் கடை உள்ளது. இந்த ரேஷன் கடையில் சுமார் 750 குடும்ப அட்டைகளுக்கு பொருள்கள் வழங்கப்படுகிறது. கடந்த ஒருமாத காலமாக ரேஷன் கடை

Updated On : 3 ஜனவரி, 2024 at 12:14 PM
பகிர்:

சரியாக பொருள்கள் வழங்காமல் தரக்குறைவாக பேசி விற்பனையாளரை கண்டித்து இன்று சிதம்பரத்தில் ரேஷன் கடையை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சிதம்பரம் பரமேஸ்வரநல்லூர் பகுதியில் வி.எஸ்.ஆர் நகரில் ரேஷன் கடை உள்ளது. இந்த ரேஷன் கடையில் சுமார் 750 குடும்ப அட்டைகளுக்கு பொருள்கள் வழங்கப்படுகிறது. கடந்த ஒருமாத காலமாக ரேஷன் கடை சரியாக திறக்கப்படுவதில்லை என்றும், ரேஷன் பொருள்கள் வாங்க வரும் பொதுமக்களிடம் அங்குள்ள விற்பனையாளர் தரக்குறைவாக பேசுவதாகவும் கூறப்படுகிறது. இன்று ரேஷன்கடை திறக்கப்பட்டவுடன் அப்பகுதி மக்கள் சுமார் 100 பேர் பொருள்கள் வாங்க சென்றுள்ளனர். அப்போது விற்பனையாளர் தரக்குறைவாக பேசியதாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த மக்கள் கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த சிதம்பரம் குடிமைப் பொருள் வழங்குதுறை வட்டாட்சியர் பழனி சம்பவ இடத்திற்கு சென்று பொதுமக்களை சமரசப்படுத்தி விற்பனையாளரை மாற்றம் செய்து, அனைத்து பொருள்களும் வழங்க நடவடிக்கை எடுப்பதாக கூறியதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

முழு கட்டுரையைப் படிக்க →