ஜூன் 21 முதல் சிதம்பரம் அரசு கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு!
சிதம்பரம் அருகே உள்ள சி.முட்லூர் அரசு கலைக்கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு வருகிற ஜூன் 21-ம் தேதி முதல் ஜூலை 2-ம் தேதி வரை நடைபெறுகிறது என கல்லூரி முதல்வர் மு.சுப்ரமணியன்
சிதம்பரம் அருகே உள்ள சி.முட்லூர் அரசு கலைக்கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு வருகிற ஜூன் 21-ம் தேதி முதல் ஜூலை 2-ம் தேதி வரை நடைபெறுகிறது என கல்லூரி முதல்வர் மு.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.
கலந்தாய்வு விபரம்: ஜூன் 21- சிறப்பு பிரிவினருக்கு (மாற்றுத் திறனாளி, விளையாட்டுத்திறன், முன்னாள் ராணுவத்தினர் வாரிசு, இலங்கை அகதி, மலைவாழ் பிரிவினர்); 24-ம் தேதி பிஎஸ்சி கணிதம், கணினி அறிவியல்; 25-ம் தேதி- பிஎஸ்சி இயற்பியல், பொதுவேதியியல்; 26-ம் தேதி -பிஎஸ்சி தொழிற் வேதியியல், விலங்கியல், தாவரயியல்; 27-ம் தேதி- பி.ஏ.தமிழ், ஆங்கிலம்; ஜூலை 1-ம் தேதி- பி.காம்., பி.பி.ஏ.,; ஜூலை 2-ம் தேதி- பி.ஏ பொருளியல் உள்ளிட்ட பாடப்பிரிவுகள்.
மேற்கண்ட பாடப்பிரிவுகளில் பிஏ தமிழ், ஆங்கிலம் தவிர ஏழைய பாடப்பிரிவுகளில் முதல் கட்ட கலந்தாய்வில் பிளஸ்டூ தேர்வின் பகுதி-3ல் 800க்கு மேலும், தமிவ் பாடப்பிரிவிற்கு பகுதி-3ல் சிறப்புத் தமிழ் படித்தவர்கள் அல்லது பகுதி-1 தமிழில் 120க்கும் மேலும், பி.ஏ ஆங்கில பாடப்பிரிவிற்கு பகுதி-2 ஆங்கிலத்தில் 120-க்கு மேலும் மதிப்பெண்கள் பெற்றவர்கள் மட்டுமே கலந்தாய்வில் கலந்து கொள்ள வேண்டும் என முதல்வர் மு.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.