ஜூலை 3,4,5 தேதிகளில் சிதம்பரம் முத்தையா தொழில்நுட்பக்கல்லூரி அனுமதி சேர்க்கைக்கான கலந்தாய்வு!
சிதம்பரம் அண்ணாமலைநகர் முத்தையா தொழில்நுட்பக் கல்லூரியில் முதலாம் ஆண்டு பட்டயபடிப்பிற்கான மாணவர்கள் சேர்க்கைக்கான கலந்தாய்வு ஜூலை 3,4 மற்றும் 5 தேதிகளில்
சிதம்பரம் அண்ணாமலைநகர் முத்தையா தொழில்நுட்பக் கல்லூரியில் முதலாம் ஆண்டு பட்டயபடிப்பிற்கான மாணவர்கள் சேர்க்கைக்கான கலந்தாய்வு ஜூலை 3,4 மற்றும் 5 தேதிகளில் நடைபெற உள்ளது என கல்லூரி முதல்வர் (பொறுப்பு) ஏ.ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: முத்தையா தொழில்நுட்பக் கல்லூரியில் சேர விண்ணப்பித்த மாணவ, மாணவியர்களுக்கு அரசு விதிமுறைப்படி மதிப்பெண் அடிப்படையில் தரவரிசைப்படுத்தி, கலந்தாய்வுக்காக அழைப்புக்கடிதம் மாணவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. முத்தையா தொழில்நுட்பக்கல்லூரியில், கலந்தாய்வுக்காக அழைக்கப்படும் மாணவர்களின் தரவரிசைப்பட்டியில் விபரத்தை கல்லூரி அலுவலகத்தில் தெரிந்து கொள்ளலாம்.
இந்த ஆண்டு சேர்க்கைக்கான தரவரிசை மதிப்பெண்கள் விபரம்: பொதுப்பிரிவு (Open)- 382 (MBC), பின்தங்கிய வகுப்பு (BC)- 229. பின்தங்கிய வகுப்பு (BC-Muslim)- 306, மிகவும் பிற்பட்டோர் (MBC)- 331, ஆதிதிராவிடர், மலைவாழ் சாதியினர் (SC.,ST), ஆதிதிராவிடர் (SC(a))-211.